சற்றுமுன் ! நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ராமநாதனை சற்று நேரத்திற்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.

நிலத்தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அர்ச்சுனாவிடம் இருந்த துப்பாக்கி மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது பணியாளர்களை அழைத்து வந்து அந்த நிலத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பெண்கள், நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி எம்.பி. ராமநாதன் அர்ச்சுனாடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா, தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை திடீரென எடுத்து பெண்களை நோக்கி காட்டி மிரட்டல் விடுத்தார். இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்வரை மல்லாம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share This Article