வவுனியாவில் நகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர், பலரிடமிருந்து 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கடனாக பெற்றுக்கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த இளையதம்பி சுகுமார் (41) என்பவரே “கௌரி யுவலர்ஸ்” என்ற பெயரில் நகை வியாபாரம் நடத்தி வந்துள்ளார். நீண்டகால நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு பலர் அவருக்கு பெருந்தொகை பணங்களை வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றதாக சந்தேகம்.

இளையதம்பி சுகுமார் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல நபர்களிடமிருந்து பணம் பெற்ற பின்னர் திட்டமிட்ட முறையில் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
CID விசாரணையில் வெளியாகும் புதிய தகவல்கள்.

மேலும் பல வர்த்தகர்களுடன் நிதி பரிவர்த்தனைகளிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரையோ அல்லது 0774101802 என்ற இலக்கத்தையோ தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.