இராணுவத்தை குறைக்கும் நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல என்றும், முப்படைகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
படைக்குறைப்பு வேண்டாம்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் எந்த சூழலிலும் தளர்வான அணுகுமுறையை கடைப்பிடிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார். முப்படைகளும் எப்போதும் பலமான நிலையில் இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக புலனாய்வு அமைப்புகள் வலுவான கட்டமைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் நாட்டில் மிகவும் வலிமையான இராணுவ அமைப்பு காணப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
இராணுவம் பலமாக இருக்க வேண்டும்.

ற்போதைய நிலையில் அக்கால இராணுவத்தினரின் சுமார் 20 சதவீதமானவர்கள் மட்டுமே சேவையில் இருக்கக்கூடும் என்றும், ஏனையோர் பலரும் ஓய்வுபெற்றிருக்கலாம் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஒரு போர் ஏற்பட்ட பின்னர் அவசரமாக இராணுவத்தை கட்டியெழுப்ப முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு போர்நிலையிலோ அமைதிநிலையிலோ இருந்தாலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இராணுவத்தை எப்போதும் வலுவாக பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.