ராஜபக்ச குடும்பத்தை சுற்றி மீண்டும் சூடுபிடிக்கும் சட்ட நடவடிக்கைகள்.

கோட்டாபய மனு, யோஷித கைது: ராஜபக்ச குடும்பம் மீண்டும் கவனத்தில்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூன் 16ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் மூலம், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளன.

கைதுக்குப் பின்னர் யோஷித ராஜபக்ச பிணையில் வெளியேற்றம்.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், நீதவான் அவருக்கு பிணை வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

சட்ட நடவடிக்கைகளின் பின்னணியில் டில்ருக்ஷி விக்ரமசிங்க.

தற்போது ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக நடைபெறும் பல வழக்குகளின் அடித்தளம் கடந்த கால விசாரணைகளிலேயே உருவானதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அந்த காலகட்டத்தில் பல முக்கிய வழக்குகளை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றவர் இலங்கையின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான டில்ருக்ஷி விக்ரமசிங்க ஆவார்.

அவரது பதவிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே தற்போதைய வழக்குகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற கருத்து மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

Share This Article